டிக்டொக் செயலிக்கு பை பை சொல்லும் பிரபல நாட்டு எம்.பிகள்!
டென்மார்க் நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் கைத்தொலைபேசியில் இருந்து ‘டிக்டொக்’ செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் 'டிக்டொக்' செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அந்த செயலியை முழுமையாக தடை செய்துள்ளன.
அதேபோல் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அரசு ஊழியர்கள் 'டிக்டொக்' செயலியை பயன்படுத்தவும், அரசின் மின்னணு சாதனங்களில் 'டிக்டொக்' செயலியை பதிவிறக்கம் செய்யவும் தடைவிதித்துள்ளன.
அந்த வரிசையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 179 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் கைத்தொலைபேசியில் இருந்து 'டிக்டொக்' செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகர் சோரன் கேட் மேலும் தெரிவிக்கையில்,
"நீங்கள், 'டிக்டொக்' செயலியை அலுவலக பயன்பாட்டுக்கான கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள் என்ற வலுவான பரிந்துரையுடன் எம்.பி.க்கள் மற்றும் ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.