துபாயில் பாதுகாப்பை சோதனை செய்து பர்த்த பிரபல இளம்பெண்... வைரல் வீடியோ!
துபாயில் பாதுகாப்பு தொடர்பில் சமூக வலைதளத்தில் பிரபலமான லெய்லா அப்ஷோங்கர் என்ற இளம்பெண் நடத்திய சோதனை குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில், துபாயின் பரபரப்பான சாலையில் லெய்லா அப்ஷோங்கர் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் முன்புற பேனட்டில் தனது தங்க நெக்லஸ் மற்றும் காதணிகளை வைக்கிறார்.
பின்னர் அந்த வழியில் செல்பவர்களை கவனிப்பதற்காக அருகே உள்ள நகைக்கடைக்கு சென்று மறைந்து கொள்கிறார்.
வழியில் அதிக நடமாட்டம் இருந்த போதிலும் யாரும் கார் மீது இருந்த தங்க நகைகளை பார்த்துவிட்டு, அதை எடுக்காமல் செல்கின்றனர்.
சுமார் அரை மணி நேரம் சோதனைக்கு பிறகு லெய்லா அப்ஷோங்கர் கூறுகையில், அரை மணி நேரம் ஆகியும் இந்த தங்கத்தை யாரும் தொடவில்லை.
Is Dubai really this safe? Or they pay influencers for such kinda marketing? pic.twitter.com/75u80l93we
— Chirag Barjatya (@chiragbarjatyaa) December 3, 2024
துபாய் உலகிலேயே பாதுகாப்பான நாடு இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம், இது வினோதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் சில பயனர்கள் துபாயின் பாதுகாப்பை பாராட்டுள்ளனர்.