குழந்தை பிறந்த சில நாட்களில் இளம் தந்தை மரணம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்
கனடாவின் Regina நகரில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த இளம் தந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SaskPower's Boundary Dam-ல் பணியாற்றி வருபவர் Ali Syed, கடந்த மார்ச் மாதம் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து Regina நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இவருடைய கர்ப்பிணி மனைவியான Misbah Zakirக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Ali Syed-க்கு தொற்று தீவிரமடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் தொடர்ந்தது, எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிறன்று மரணமடைந்தார்.
இதுகுறித்து தொற்று நோயியல் மருத்துவரான Dr. Alexander Wong கூறுகையில், கடந்த வாரம் Ali Syed-ன் மனைவி அவர்களது மூன்றாவது குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார்.
Ali Syed மரணமடைந்தது மிக துயரமான சம்பவம், அவர் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் வைரஸ் பரவுதலை தடுக்க ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கலாமா என ஆலோசித்து கொண்டிருக்கிறோம், உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றோலோ, கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறோம் என நினைத்தாலோ உங்களது வீட்டிலேயே ஓய்வு எடுங்கள்.
மக்கள் கட்டுப்பாடுகளுடன் இருந்தாலோ கொரோனா பரவலை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.