பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தை காலமானார்
பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அப்துல் காதிர் கான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 85.
இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலையால் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து, முதன்முதலில் அணு ஆயுதத்தை வடிவமைத்து கொடுத்தவர் அப்துல் காதிர் கான்.
எனினும் பல்வேறு காரணங்களினால் கடந்த 2004ம் ஆண்டு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
ஆனால் 2009ம் ஆண்டு நாட்டுக்குள் எங்கு வேணாலும் அப்துல் காதிர் கான் சுற்றித்திரியலாம் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் வயது முதிர்வால், உடல்நலக்குறைவு மற்றும் திடீர் மூச்சு திணறால் அவதிப்பட்டு வந்த அப்துல் காதிர் கான் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவு மிகுந்த வேதனையளிப்பதாகவும், இவரின் சேவையை பாகிஸ்தான் மறக்காது எனவும் ஜனாதிபதி ஆரிப் அல்வி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.