சீனாவின் அறிவிப்பால் எழுந்த 3ஆம் உலகப்போரின் அச்சம்
அமெரிக்கா படை மீது எந்நேரத்திலும்தாக்குதல் நடத்தப்படும் என சீனா அரசு ஊடகங்களில் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா படையானது தைவான் துருப்புகளுக்கு பயிற்சி அளிப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இந்த ஆவேச எச்சரிக்கை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங், தைஅவனை மீண்டும் சீனாவுடன் ஒன்றிணைப்பதாக சபதம் எடுத்துள்ளார். மீண்டும் தேவனைக் கைப்பற்றுவோம் என சீனாவின் அறிவிப்பை தொடர்ந்து தைவானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.
அண்மைக்காலமாக தாய்வானின் வான்வெளிப் பகுதியில் சீன விமானங்கள் பறந்து வருகின்றன. மேலும் இது தாக்குதலுக்கான ஒத்திகையாகக் கூட இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் எந்த சூழலிலும் நாங்கள் தைவானைக் காப்போம் என அமெரிக்கா உறுதியளித்தது. இந்த நிலையில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுக்கோளான த குளோபல் டைம்ஸ் அமெரிக்காவுக்கு பயங்கர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மேலும்,"தைவான் ஜலசந்தியில் ஒருமுறை போர் நடந்தால், அது அமெரிக்கா இராணுவ வீரர்கள் முதலில் அகற்றப்படுவார்கள்" என எச்சரித்தது.
926 வார்த்தைகள் கொண்ட அந்த கட்டுரையில் தைவானைக் காக்க அமெரிக்கா முடிவெடுத்தால், ஆப்கனைக் காட்டிலும் மிகப்பெரும் இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும். 'வாஷிங்க்டன் தற்போது ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடி வருவதாகவும்,அது தன்னை நெருப்பை ஈர்க்கும் என்பதையும். இதற்காக இளைய அமெரிக்க இராணுவ வீரர்களின் உயிரை பணயம் வைப்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்' என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒருவேளை தைவானை கைப்பற்ற சீனா ராணுவம் தனது பலத்தைக் காட்டும் பட்சத்தில். அமெரிக்கா படைகள் தொடர்பில் அமெரிக்கா எடுக்கும் முடிவே உலக போராக மாறுமா என்பதை தீர்மானிக்கும். தைவானைக் காட்டிலும் சீனாவின் இராணுவப்படை பலம் வாய்ந்தது தான். ஆனால் படையெடுப்பு நடத்தது சீனாவுக்கு ஒன்று மிகவும் எளிதான காரியமல்ல.
தைவான் தீவைக் கைப்பற்றுவதெனில் தாய்வானின் ஜலசந்தியில் சுமார் 80 மைல்கள் அளவில் சீனா தனது துருப்புகளையும், தளப்பாடங்களையும் அனுப்ப வேண்டும்.
இந்த நடவடிக்கையானது மனித வரலாற்றில் மீண்டும் ஒரு உலக போரை நிகழ்த்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை எழுந்த வண்ணம் உள்ளன.