பெடரல் ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடவிருக்கும் பிரதமர் ட்ரூடோ
கனடாவில் பெடரல் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில், பெடரல் பணியிடங்களில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டு என்ற புதிய கொள்கையை பிரதமர் ட்ரூடோ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விமான பயணம் அல்லது ரயில் பயணம் மேற்கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதும் இதில் உறுதி செய்யப்படும் என்றே கூறப்படுகிரது.
பிரதமர் ட்ரூடோ அறிவிக்கவிருக்கும் புதிய கொள்கையானது இந்த மாத இறுதியில் இருந்து அமுலுக்கு வரும் என்றே தெரிய வந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், கடந்த ஆகஸ்ட் மாதம், தமது அரசானது பெடரல் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்ற கொள்கையை முன்வைக்கும் என ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
தற்போது பெடரல் அலுவலகங்களில் பணியை தக்க வைக்க வேண்டும் என்றால் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
மேலும், தடுப்பூசி கட்டாயம் என்பது குடியிருப்பில் இருந்து பணியாற்றும் பெடரல் ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, மிக அரிதாகவே இந்த விவகாரத்தில் சலுகை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.