பிரான்ஸில் குடும்ப வன்முறையால் பெண் படுகொலை
பிரான்ஸில் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் Montmagny (Val-dOise) நகரில் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றில் இருந்து அவசர உதவிக்குழுவுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் குறித்த வீட்டுக்கு விரைந்து சென்றபோது அங்கு பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து அவரை காப்பாற்ற தீயணைப்பு படையினர் முயற்சி செய்த போதும் அப் பெண் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் குடும்பவ வன்முறை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும், அவருடைய கணவரே கத்தியால் குத்தியுள்ளார் எனவும், கொல்லப்பட்டவர் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளில் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.