ஒன்றாரியோவில் பண்டிகைக் கால கொரோனா வழிக்காட்டல்கள் அறிவிப்பு!
ஒன்றாரியோவில் எதிர்வரும் பண்டிகைக் கால கொரோனா வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வழிகாட்டலில், பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடாத்தும் போது மக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒன்றாரியோவின் பிரதம மருத்துவ அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். பொதுமக்கள் உச்ச அளவில் கோவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் ஒன்றாரியோவில் கொரோனா தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டு (2020) நத்தார் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளை வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது குறிப்படத்தக்கது.