ஸ்காபரோ அடுக்குமாடி கோபுரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து; இருவருக்கு நேர்ந்த கதி!
இன்று அதிகாலை ஸ்காபரோ அடுக்குமாடி கோபுரத்தில் திடீரென தீ பரவியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது குறித்து டொராண்டோ தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், வின்வியூ கோர்ட்டுக்கு அருகில் மற்றும் கிங்ஸ்டன் சாலைக்கு கிழக்கே உள்ள 10 க்ளென் எவரெஸ்ட் சாலைக்கு, அதிகாலை 3 மணிக்கு முன், இரண்டு அலாரங்களை எட்டிய ஒரு தீவிபத்துக்காக அவர்கள் அழைக்கப்பட்டனர்.
குறித்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீப்பிழம்புகள் காணப்பட்டதாக தெரிவித்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கிய இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதேசமயம் இந்த தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.