ஒரு வயது குழந்தையின் உயிரைப் பறித்த தீ குழி: ஆபத்தான நிலையில் நால்வர்
ஒன்ராறியோவின் Bayham பகுதியில் வீட்டின் முன்பு உருவாக்கிய தீ குழியால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை மரணமடைந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் பெற்றோர் உட்பட நால்வர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
திங்கட்கிழமை மாலை நேரம் குறித்த குடும்பமானது தங்களின் குடியிருப்புக்கு முன்பு தீ குழி ஒன்றை அமைத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த தீ குழியால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூன்று குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளது.
குழந்தைகளின் பெற்றோர் 28 வயது பெண்மணி மற்றும் 33 வயது ஆண் ஆகிய இருவரும் மிக மோசமாக காயம் பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களின் தற்போதைய நிலை குறித்து பொலிசார் தகவல் வெளிய்யிட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தற்போது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.