நடுவானில் துயர சம்பவம்... பாரீஸ் புறப்பட்டு சென்ற விமானம் பாதிவழியில் தரையிறக்கம்
பஹ்ரைன் நாட்டில் இருந்து பாரீஸ் புறப்பட்டு சென்ற விமானத்தில் ஊழியர் ஒருவர் நடுவானில் மாரடைப்பால் இறந்ததை அடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு புறப்பட்டு சென்ற கல்ஃப் ஏர் விமானத்தில் யாசர் சலே என்பவர் ஊழியராக பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புறப்பட்ட சில மணி நேரங்களில் அந்த விமானமானது அவசரமாக ஈராக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது யாசர் சலே மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார். ஈராக்கில் தரையிறங்கியதும், உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
ஆனால் ஏற்கனவே அவர் இறந்துள்ளதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சுமார் 4 மணி நேரம் தாமதமாக குறித்த விமானம் ஈராக்கில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்டு சென்றது என தகவல் வெளியாகியுள்ளது.