கனடாவில் ஒரே மாதத்தில் பாதிக்கப்பட்ட அரை மில்லியன் பயணிகள்: வெளியான காரணம்
மே மாதத்தில் மட்டும் ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களில் வந்த சுமார் அரை மில்லியன் பயணிகள் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சுமார் அரை மில்லியன் பயணிகள் பியர்சன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இதனால் விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் கட்டுப்படுத்த வாய்ப்பாக அமைந்தது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 2,700 சர்வதேச விமானங்கள் பியர்சன் விமான நிலையத்தில் தாமதப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் 2019 மே மாதத்தில் இந்த என்ணிக்கை வெறும் 4 எனவும், இதனால் அப்போது பாதிக்கப்பட்ட பயணிகள் சில நூறு எனவும் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள், சுங்க அதிகாரிகளின் சோதனை உட்பட கனடா விமான நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுவது வாடிக்கை தான் எனவும், ஆனால் இந்த முறை ஊழியர்கள் பற்றாக்குறை, கொரோனா கட்டுப்பாடுகள் என விமான நிலையங்களில் கூட்டம் தத்தளித்தது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விமான நிலையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையை ஈடுகட்ட புதிதாக ஊழியர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படும் என கனடா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.