40 விமானங்கள் ஒரேயடியாக ரத்து: பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா சரவதேச விமான நிலையத்தில் இருந்தே கடந்த 24 மணி நேரத்தில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், காட்டுத்தீ காரணமாக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியின் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளதாக உரிய அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு பிறகு இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். White Rock ஏரி காட்டுத்தீயானது தற்போது விரிவடைந்து கிழக்கில் Okanagan ஏரி பகுதி நோக்கி நகர்வதால், கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரம் வரையில் விமானம் பறக்கக் கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான பயணிகள் உரிய தகவல்களை பெற்று, அதன்படி முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.