ஜேர்மனியில் வெள்ள அனர்த்தத்தால் 80 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் மாயம்
ஜேர்மனியில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 80 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியிலும் (Germany ) அதன் அயல்நாடுகளான பெல்ஜியம், லக்ஸம்பேர்க், நெதர்லாந்து,; ஆகியவற்றிலும் வழக்கத்துககு மாறாக கடும் மழை பெய்து வருகிறது. பெல்ஜியத்தில் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியின் ரைன்லாண்ட், நோர்த் ரைன் வெஸட்பாலியா (North Rhine-Westphalia ) , ரைன்லாண்ட் – பலாடைனேட் (Rhineland-Palatinate) மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாநிலங்களில் ஆறுகளில் வெள்ளம் கரைதாண்டி ஓடுவதால் மேலும் பல வீடுகள் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிகையில் மீட்பு நடவடிக்கைகள் இன்றும் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் இதுபோன்ற பேரழிவை நாம் கண்டதில்லை என ரைன்லாண்ட் – பலாடைனேட் மாநிலத்தின் பிரதமர் மலு ட்ரையர் தெரிவித்துள்ளார்.
ரைன்லாண்ட் – பலாடைனேட் ( மாநிலத்தின் அஹ்வெய்லர் மாவட்டத்தில் சுமார் 1,300 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயலிழிந்த தொலைபேசி வலையமைப்புகள் காரணமாக எனினும் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த அனர்த்தத்தில் 60 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என தான் நம்புவதாக பிராந்திய உள்துறை அமைச்சர் ரொஜர் லேவென்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
பல வீதிகளும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வாகனங்கள் தலைகீழாக புரண்டுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மேலும் மீட்பு நடவடிக்கைகளில் சுமார் 1000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜேர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் (Angela Merkel), உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.