புறப்படுங்கள்... ஊருக்குள் வெள்ளம் வருகிறது: ஒரு ஊரையே எச்சரித்த கனேடிய சிறுமிகள்
ஊருக்குள் வெள்ளம் வருவதைப் பார்த்து அனைவரையும் எச்சரித்த கனேடிய சகோதரிகள் இருவர், தாங்கள் இதுவரை இப்படி ஒரு வெள்ளத்தைப் பார்த்ததில்லை என்கிறார்கள்.
கனடாவின் Fort Providence, N.W.T. என்ற பகுதியில் அமைந்துள்ளது Mackenzie நதி.
நதியிலிருந்து திடீரென ஊருக்குள் வெள்ளம் வரத்தொடங்கியதைக் கண்ட Shaylyn Hope (12)ம் அவளது தங்கையான Kierstyn (9)ம் ஓடிச் சென்று ஊர் மக்களை எச்சரித்துள்ளனர்.
உடனே, Jean Marie River மற்றும் Fort Simpson ஆகிய பகுதிகளில் வாழும் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
வீட்டை விட்டு தூரமாக இருப்பதற்கு நான் பொதுவாக பயப்படுவதில்லை, இந்த முறை நான் நடுங்கிப்போனேன், இதற்கு முன் நான் பெருவெள்ளத்தைப் பார்த்ததும் இல்லை என்கிறாள் Shaylyn.
இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், நதி மீது பனி உறைந்துள்ளது. அந்த பனி உருகுமானால், இன்னும் தண்ணீர் மட்டம் உயரும்.
அதனால், இன்னும் பிரச்சினை அதிகமாகும். ஆக, பனி உருகுமா, இன்னும் அதிக தண்ணீர் ஊருக்குள் வருமா என்ற அச்சத்துடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.