20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி! அமெரிக்கா
அமெரிக்கா 20 மாதங்களுக்கு பிறகு தனது எல்லைகளை திறந்து சர்வதேச பயணிகளை நாட்டில் நுழைய அனுமதித்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது தரை வழி எல்லைகளை மூடியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு சுற்றுலா மற்றும் இதர பயணிகள் வருவதற்கும் தடை இருந்தது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் பலனாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கணிசமாக சரிந்து வரும் நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்க தொடங்கினார்.
அதன்படி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச பயணிகள் நவம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமெரிக்கா வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்தது.
இதற்கமைய நேற்று தனது எல்லைகளை திறந்து சர்வதேச பயணிகள் நாட்டில் நுழையலாம் என அனுமதித்ததுள்ளது.
முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிறுவனங்கள் படையெடுப்பர்கள் என எதிர்பார்க்கின்றன.
குறிப்பாக ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் இருந்து அதிகமான பயணிகளை விமான நிறுவனங்களுக்கு வரலாம் எனவும் இதனால் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையிலான விமான போக்குவரத்து கடந்த மாதத்தை விட இந்த மாதம் 21 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.