எனது தந்தையின் முடிவு இதுவே! நாமல் பகிரங்க அறிவிப்பு
தனது தந்தையான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகள் இருந்தாலும் இலங்கையை விட்டு வெளியேறும் திட்டமில்லை எனவும் நாமல் ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
எமது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக பத வதந்திரகள் பரவி வருகின்றன போதிலும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டில் இருந்து வெளியேறும் நோக்கில் திருகோணமலை கடற்படை தளாத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து கடற்படை தளத்திற்கு எதிரில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். இவ்வாறான நிலைமையிலேயே தமது குடும்பத்தினர் நாட்டில் இருந்து வெளியேற மாட்டார்கள் என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.