கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானார்
கத்தார் நாட்டை அதன் நாடோடி பின்னணியில் இருந்து உலகளவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக மாற்றியமைத்த அந்நாட்டின் முன்னாள் அமீரும், 'தந்தை அமீர்' என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி தனது 74 ஆவது வயதில் காலமானார்.
இத்தகவலை நாட்டின் மிக உயர்ந்த அரசாங்க அமைப்பான அமிரி திவான் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

"அமிரி திவான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல்-தானியின் மறைவை அறிவிக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது ஆன்மாவுக்குக் கருணை காட்டட்டும், மேலும் அவர் தனது தாயகத்திற்காகவும் தேசத்திற்காகவும் சாதித்தவற்றுக்குச் சிறந்த நற்பலன்களை வழங்கட்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹமத் 1995 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கத்தாரை ஆட்சி செய்துள்ளார். வளைகுடா அரபு நாடுகளின் பாரம்பரிய அரண்மனை வழக்கங்களுக்கு மாறாக, வாரிசுரிமைச் சீராக நடப்பதை உறுதி செய்வதற்காக 2013 ஜூன் மாதத்தில் அவர் தனது அதிகாரத்தைத் தனது மகனும் தற்போதைய அமீருமான ஷேக் தமீமிடம் தானாகவே முன்வந்து ஒப்படைத்துள்ளார்.
முன்னதாக 1995 ஆம் ஆண்டில், இரத்தம் சிந்தாத ஒரு உள்நாட்டுப் புரட்சி மூலமாகத் தனது தந்தையை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு இவர் கத்தாரின் அமீராகப் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஹமத் தனது 18 ஆண்டுகால ஆட்சியில் கத்தாரின் சர்வதேச அந்தஸ்தை மிக உன்னதமான நிலைக்கு உயர்த்தினார்: