ரொறன்ரோவில் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் இவர் தான்...
ரொறன்ரோ உயிரியல் பூங்கா அருகாமையில் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலையில் ஸ்கார்பரோவில் உள்ள பழைய ஃபின்ச் அவென்யூ அருகில் ரீசார் சாலையில் குறித்த நபரின் சடலம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பொலிசார் அவரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிராம்ப்டன் பகுதி குடியிருப்பாளரான 20 வயது Ronaldo Eustaquio Marques Filho என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் நெருப்பு வர காரணம் என்ன? அல்லது அந்த சடலத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்றவர்கள் யார் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் தரப்பு இந்த வழக்கை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.