வாகன் தொழிற்பேட்டையில் ஆணின் சடலம்: விசாரணையில் முக்கிய திருப்பம்
கடந்த பிப்ரவரி மாதம் வாகன் தொழிற்பேட்டையில் 57 வயதான நபர் இறந்த விவகாரத்தில் பொலிசார் நால்வர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் வாகன் தொழிற்பேட்டையின் சாலை முடிவில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவப் பகுதிக்கு விரைந்த யோர்க் பிராந்திய பொலிசார், 57 வயதான அந்த நபரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உடற்கூராய்வில், அந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது. மேலும், அந்த நபர் ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த Gus Kouboules என்பதும் அடையாளம் காணப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த யோர்க் பொலிசார், நால்வர் கைதாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.