பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரே வாரத்தில் பறிபோன 800 உயிர்கள்
வெப்ப அலை காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 800 பேர் பலியானதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உடற்கூராய்வு மேற்கொள்ளும் அமைப்பு குறித்த தகவலை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இது, கடந்த 5 ஆண்டுகளில், ஜூன் 25 முதல் ஜூலை 1ம் திகதி வரை மொத்த மாகாணத்தில் ஒரு வாரத்தில் சராசரியாக பதிவான இறப்புகளின்(198) எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜூன் 28 திங்கள் (147), செவ்வாய், ஜூன் 29 (300) மற்றும் ஜூன் 30 புதன்கிழமை (124) ஆகிய நாட்களில் பதிவாகியுள்ளது.
ஃப்ரேசர் சுகாதார பகுதியில் மட்டும் அந்த ஒரு வாரத்தில் 353 பேர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 2020ல் இதே காலகட்டத்தில் இப்பகுதியில் பதிவான மரண எண்ணிக்கை வெறும் 61 மட்டுமே.
மேலும், வான்கூவர் கடலோர சுகாதார பகுதியில் ஜூன் 25 முதல் ஜூலை 1ம் திகதி வரை மொத்தம் 202 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 45 பேர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளனர்.
மரண எண்ணிக்கை அதிகரிக்க, மாகாண அவசர மருத்துவ உதவிக் குழுவினர் உரிய முறையில் செயல்படவில்லை என்றே பொதுமக்களால் விமர்சனம் முன்வைக்கப்பட்டுகிறது.