பிரித்தானியாவுடன் தொடர்ந்து மோதும் பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அவர்கள் பிரிட்டனை பழிவாங்க அணைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால் அவரது கூற்று அவருக்கு எமதரத்தையே அளித்தது. பிரிட்டன் தங்களுக்கான ஜெர்சி தீவில் பிரான்சின் எந்தவொரு மீன்பிடி படகையும் அனுமதிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பிரான்ஸ் தங்களுது படகுகளுக்கு அனுமதி வழங்கவில்லையெனில் ஜெர்சி தீவிற்கு வழங்கி வரும் மின்சாரத்தை தடை செய்வோம் என மிரட்டல் விடுத்தது.
மேலும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரிட்டனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கைக்கு ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
அதாவது கடந்த வாரம் பிரான்ஸ், பிரெக்சிட் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி பிரிட்டன் செயல்படுவதாக அறிக்கை ஒன்றை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது.
இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகள் இவை எதனையும் ஏற்கவில்லை. அதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கான ஏற்ற ஒப்பந்தத்தை உருவாக்கி வாருங்கள் எனவும் தெரிவித்துவிட்டது