பிரான்ஸ் நாட்டை விடாது துரத்தும் கொரோனா..தொற்று எண்ணிக்கை 58 லட்சத்தைக் கடந்தது
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தாக்கத்தின் வேகம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
அதற்கு அடுத்ததாக பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 791 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58 லட்சத்து 170 ஆக உள்ளது. ஒரே நாளில் 240 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 49.51 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 7.41 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.