கொரோனாவால் திணறும் பிரான்ஸ்; பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்தை தாண்டியது
பிரான்ஸில் கொரோனாவால பலியானோர் எண்ணிக்கை 99,135 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும் பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.
இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 8,536 ஆக பதிவாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,67,216 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 385 பேர் உயிரிழக்க, பலியானோர் எண்ணிக்கை 99,135 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 3,10,934 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 46,57,147 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.