பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்
பிரான்சில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று.
அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4 ஆவது அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மெக்ரொன் தலைமையிலான அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரான்சில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.