இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரான்ஸ்
இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளதுடன் இலங்கை பயணத்தின் போது ‘எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்’ என ஆலோசனை வழங்கியுள்ளது .
இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீடிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி
அத்துடன் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் சாதகமாக இருப்பதாகவும் உள்ளூர் பயண நிறுவனங்களுடன் பயணத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறும் சுற்றுலாப் பயணிகளை பிரான்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது .
அதேவேளை இலங்கைக்கு ‘அத்தியாவசியமான பயணங்களை மட்டும்’ மேற்கொள்ளுங்கள் என தமது நாட்டு பிரஜைகளுக்கு முன்னர் பிரான்ஸ் கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.