திடீரென அதிகரித்த ஓமிக்ரான் தொற்று: வெளிவரும் புதிய தகவல்
பிரான்சில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஓமிக்ரான் தொற்றானது திடீரென்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஓமிக்ரான் கொரோனா தொற்று. பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் சர்வதேச எல்லைகளை மூடியுள்ளதுடன், நேரடி விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் ஓமிக்ரான் தொற்றானது பிரான்சில் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு 8 மணிக்கு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, 16 பேர்களுக்கு இதுவரை ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போதை புதிய மாறுபாடு தொடர்பில் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.