பிரான்சில் குடும்ப வன்முறைக்கு எதிராக அமைதியான முறையில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக பாரிஸில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
NouseToutes என குறிக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக இடம்பெற்றது. இவ்வாண்டு தொடக்கம் முதல் 101 குடும்ப பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 146 பெண்கள் குடும்ப வன்முறைக்கோ அல்லது அவர்களது கணவர் அல்லது முன்னாள் காதலனாலோ கொல்லப்பட்டிருந்தனர். அதே சமயம் கடந்த ஆண்டு 102 பெண்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நாடு முழுவதும் படத்துக்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.