தமிழ் மருத்துவமுறையில் கொரோனா ஆய்வுகளை மேற்கொள்ளும் நாடு....எந்த நாடு தெரியுமா
கொரோனா தொற்றின் தீவிர வடிவங்களை அறிய பிரான்ஸ் நாட்டு மக்கள் ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட PCR சோதனையை வடிவமைத்துள்ளனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நன்கு அடையாளம் காணக்கூடிய ஒரு புதிய PCR சோதனையாக இது இருக்கும்.
இந்த புதிய PCR சோதனை, கிளாசிக் பிசிஆர் சோதனை போலல்லாமல், வைரஸை மட்டும் பார்க்காமல், Interferonகளின் அளவு, அதாவது ஒரு நோய்த்தொற்றின் போது உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உற்பத்தி செய்யும் புரதங்களின் அளவே கணக்கெடுப்பதாக உள்ளது. அதன் முடிவு எண்ணிக்கை குறைவாக இருந்தால் நோயாளிக்குகொரோனாவின் தீவிர வடிவத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.
கடுமையான வடிவங்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு, அது இன்னும் வித்தியாசமானது அதாவது அவர்களின் மாதிரிகள் அதிக அளவு வைரஸைக் கொண்டிருக்கலாம் ஆனால் வகை I Interferonகள் இல்லாமல் இருக்கும். எனவே தொற்றின் தாக்கத்தை அடையாளம் காண முடியும் என்று விளக்கினார் டாக்டர் Sophie Troilet-Asant இந்த ஆய்வுக்கு பொறுப்பான ஆராய்ச்சியாளர்கள்.
டஜன் கணக்கான நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த Leon ஆய்வு, மாறுபாடுகளை சிறப்பாகக் கண்டறிவதை சாத்தியமாக்கும். மேற்குறித்த முறை,தமிழர்களின் பண்டைய கால சித்தர்கள் வழிமுறையை ஒத்த நவீன வடிவமாக இருக்கின்றது. மேற்கத்தேய மருத்துவ உலகம் நோய்களுக்கு சிகிச்சை செய்து பழகியுள்ளது.
ஒவ்வொரு நோய்க்கும் பெயரை வைத்து பல்லாயிரகணக்காண நோய்களை உருவாக்கி அதற்கு மருந்துகளையும் உருவாக்கி விட்டுள்ளது. நோய்கள்,மருந்துகள் அதிகரிக்க ஒரு முடிவே இல்லாமல் மக்கள் இதற்குள் அகப்பட்டு கொள்கின்றனர். இதற்கு நேர் எதிராக தமிழர் பாரம்பரிய சித்தர் மருத்துவம் நோய்களை விட்டுவிட்டு உடலுக்கே வைத்தியம் செய்கின்றது.
இதன் மூலம் பக்கவிளைவுகள் இன்றி நோய்களிடமிருந்து மக்களை காப்பாற்றி கொள்கின்றது. தவிர அண்டம் முழுதும் உள்ள கோடிகணக்கான வைரஸ்களுக்கும் ஒவ்வொரு பெயரை வைத்து மருந்து கண்டுபிடிக்க ஆரம்பித்தால் தலை காய்ந்துவிடும்.
கொரானாவால் ஏற்பட்ட நன்மையோ தெரியவில்லை, இவர்கள் இந்த ஆராய்ட்சியை மக்கள் உடலில் இருந்து ஆரம்பித்து கொள்கிறார்கள்.