ஏப்ரல் மாதம் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன ஐந்து வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
பூர்வகுடியின மக்கள் செறிந்து வாழும் ரெட் ஏர்த் க்ரீ பகுதியின் நதியொன்றில் ஐந்து வயதான சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி ஐந்து வயதான பிராங்க் யங் என்ற சிறுவன் காணாமல் போயிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குறித்த சிறுவன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரை வழியாகவும், வான் வழியாகவும், படகு மூலம் நீர் நிலைகளிலும் சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் எவ்வித சந்தேகங்களையும் வெளியிட முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் சடலத்தை உறவினர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.