பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு..இராணுவ உதவியை நாடும் அரசு
பிரித்தானியா ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகியதன் காரணமாக மற்ற ஐரோப்பிய நாட்டை சேர்ந்த டேங்கர் லொறி ஓட்டுனர்களை பிரித்தானியாவில் பணியமர்த்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டது.
மேலும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பிரித்தானியாவிலிருந்து வெளியேறிய மற்ற நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான டேங்கர் லொறி ஓட்டுனர்கள் பிரித்தானியாவுக்கு திரும்பவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக பிரித்தானியாவில் சுமார் 1 லட்சம் டேங்கர் லொறி ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரித்தானிய முழுவதும் உள்ள பெற்றோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெற்றோல் எடுத்து செல்வது தடைபட்டது. இதனால் அங்கு பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து எரிவாயு நிலையங்களிலும் பெற்றோல் நிலையங்கள் மூடப்பட்டன. மேலும், இதன் காரணமாக சிறிய அளவே பெற்றோல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
இதற்குப் பிறகு, யுனைடெட் கிங்டம் டேங்கர்களில் பெற்றோலை ஸ்டேஷன்களுக்கு கொண்டு செல்ல இராணுவத்தின் உதவியை கோர முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.