கனேடிய இசைக் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
கனடாவில் நிலவி வரும் எரிபொருள் விலை ஏற்றம் அனைவரைப் போலவே இசைக் கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.
இசைக் கலைஞர்கள் பல்வேறு மாகாணங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடாத்துவது வழமையானது.
எனினும், தற்போது நிலவி வரும் எரிபொருள் விலை உயர்வினால் இசைக் கலைஞர்களினால் போக்குவரத்திற்காக பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளது.
இதனால் சில இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக வெளியிடங்களுக்கு செல்வதனை தவிர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே பெருந்தொற்று நிலைமைகளினால் இசை நிகழ்ச்சிகளை நடாத்த முடியாதிருந்த இசைக் கலைஞர்களுக்கு எரிபொருள் விலையேற்றம் பேரிடியாக அமைந்துள்ளது.
எரிபொருளின் விலைகள் லீற்றருக்கு இரண்டு டாலர் என்ற அடிப்படையில் அதிகரித்துள்ளதாகவும் இதனை சமாளிக்க முடியாது திண்டாடுவதாகவும் இசைக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
நேரடி இசை நிகழ்ச்சிகளை நடாத்தும் கலைஞர்கள் பலர் பாரியளவு பொருளாதார நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.