கனடாவின் மிகவும் தேடப்படும் நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது
கனேடிய பொலிசாரால் நீண்ட 2 ஆண்டுகளாக தேடப்படுவந்த, பல கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல மாதங்கள் பொலிசாருக்கு தண்ணி காட்டிவந்த நசீம் அலி முகமது என்ற 23 வயது இளைஞரே பொலிசாரிடம் தற்போது சிக்கியுள்ளார்.
தங்க நகை ஒன்றை திருடும் நோக்கில் களேபரத்தில் ஈடுபட்ட முகமது, ஆயுதம் காட்டியும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து கனடா எல்லையில் அமைந்துள்ள சியாட்டில் நகர பொலிசாரிடம் வசமாக சிக்கிய முகமது மீது முதல் நிலை கொள்ளை வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், 75,000 பிணைத் தொகையுடன் கிங் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். சர்ரே பொலிசார் கடந்த பல மாதங்களாக முகமதின் சமூக ஊடக பக்கத்தினை கண்காணித்து வந்துள்ளனர்.
தற்போது அவர் அமெரிக்க எல்லை நகரமான சியாட்டிலில் கைதானதையடுத்து, கனடாவில் அவர் மீதான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.