கனேடிய பயணிகளுக்கு விலக்கு தெரிவித்துள்ள பிரித்தானியா
அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் சுய தனிமைப்படுத்தல் தேவையில்லை என புதிய திட்டத்தை அறிவித்துள்ள பிரித்தானியா கனேடிய பயணிகளுக்கு சலுகை அளிக்க மறுத்துள்ளது.
பிரித்தானியாவின் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை 4 மணிக்கு நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் சிக்கலின்றி நுழைய முடியும்.
ஆனால், இந்த புதிய திட்டத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்களை ஏன் உட்படுத்தவில்லை என்ற காரணத்தை பிரித்தானியா நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமின்றி குட்டி நாடுகளான வத்திக்கான், அன்டோரா, மொனாக்கோ ஆகிய நாடுகளின் பயணிகளும் ஆகஸ்ட் 2ம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தல் சிக்கல் இன்றி பிரித்தானியாவில் நுழைய முடியும்.
திருத்தப்பட்ட இந்த புதிய விதியால், குடும்பங்கள் ஒன்றிணைய முடியும் எனவும் அதிகரித்துள்ள வர்த்தகத்திலிருந்து வணிகங்கள் பயனடைய உதவும் எனவும் பிரித்தானிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.