நியூஸிலாந்தில் முடக்கல் நிலை மேலும் நீடிப்பு
நியூஸிலாந்தின் கடுமையான நாடு தழுவிய முடக்கலை பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) திங்களன்று நீடித்துள்ளார்.
புதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரையும், புதிய கொவிட்-19 வெடிப்பின் மையப் பகுதியான ஆக்லாந்தில் ஆகஸ்ட் 31 வரையும் அமுலில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
எனினும் தற்போதைய டெல்டா மாறுபாட்டின் கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்தை அடையவில்லை எனக் கூறிய நியூஸிலாந்து பிரதமர், டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களால் சமூகத்தில் தொடர்புகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை நியூசிலாந்து திங்களன்று மேலும் 35 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளை பதிவுசெய்ததுடன், டெல்டா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.