ஜேர்மனியில் தீவிரம் காட்டும் கொரோனா பரவல்!
உலக அளவில் திடீரென மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மனியில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
இதேவேளை, ஜேர்மனியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 448 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து ஜேர்மனியில் 70 இலட்சத்து 59 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 11 ஆயிரத்து 752 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 7 இலட்சத்து 29 ஆயிரத்து 794 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 4,636 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61,300 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 800 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.