ஜேர்மனியில் மேலும் 117 பேர் கொரோனா தொற்றால் பலி!
ஜேர்மனி நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 17 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து ஜேர்மனியில் 69 இலட்சத்து 99 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 1 ஆயிரத்து 151 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 4636 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 38,500 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 60 இலட்சத்து 87 ஆயிரத்து 300 பேர் குணமடைந்துள்ளனர்.