ஜேர்மனியில் 4,500க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட Omicron வைரஸ் ஜேர்மனியில் பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 24 மணிநேரத்தில் ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்து 679 பேர் பாதிக்கப்பட்டதோடு 272 பேர் மரணமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில் இதுவரை மொத்தமாக 69 இலட்சத்து 82 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 10 ஆயிரத்து 908 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 22 ஆயிரத்து 520 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 4,636 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 56 ஆயிரம் பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 60 இலட்சத்து 48 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்.