இந்தியா மீதான பயண தடையை நீக்கியது ஜேர்மன்!
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன. டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு முழுவதும் அதிகளவிலானோர் பாதிப்படைந்தனர்.
உயிரிழப்புகளும் அதிகம் காணப்பட்டன. இதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்தன. இந்நிலையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகம் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இதனை முன்னிட்டு அந்த நாடுகளுடனான விமான சேவைக்கு ஜேர்மனி அரசு தற்காலிக தடை விதித்தது.
இந்த நிலையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளது என ஜேர்மனி நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.