கனடாவில் ரயிலில் பயணிக்கும் போது இப்படியொரு ஆபத்தா!
கனடாவில் ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்படக்கூடிய ஒரு ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயிலின் மிதி பலகையில் பயணிக்கும் போது ஒரு வகை நச்சுத் தாவரத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
பன்றிக்கொட்டை எனப்படும் ஹாக்கீட் என்ற காட்டுத் தாவரங்கள் ரயில் பாதைகளில் வளர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக எவர்கிறீன் பிரிக்வோர்க் பகுதி ரயில் பாதைகளில் இந்த காட்டுத் தாவரங்களை அதிகளவில் காண முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வகை தாவரத்தை தொட்டால் கடுமையான எரிச்சல் ஏற்படும் எனவும் கொப்புளங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தாவரங்களை கண்டால் என்னும் இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.