இலங்கையில் ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி
நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சீஷெல்ஸ் நாட்டில் உள்ள பாடசாலைக்கு கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர்களை தெரிவு செய்து தருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
17 இலங்கை ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கையில் உள்ள சீஷெல்ஸ் துணை தூதரகம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் கணித படத்திற்கு ஏழு வெற்றிடங்களும், விஞ்ஞானப் படத்திற்கு 10 வெற்றிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.