பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு நேர்ந்தகதி!
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் ருவண்டாவிற்கு அழைத்துச் செல்ல லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.
புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக தொண்டு நிறுவனங்களும் ஒரு தொழிற்சங்கமும் இணைந்து அதனை தடுப்பதற்கான தடை உத்தரவைக் கோரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனால் எதிர்வரும் செவ்வாய்கிழமை அகதிகளை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் பிரித்தானியாவில் இருந்து ருவண்டாவிற்கு பயணிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில், முதற்கட்டமாக 31பேர் ருவண்டாவிற்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.