பிரான்ஸ் மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
பிரான்ஸில் இந்த குளிர்காலத்தில் மக்களின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் எரிசக்தி காசோலைகள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, அதனை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விதிமுறைகளை அரசாங்கம் வகுத்துள்ளது. அதற்கமைய, இந்த கொடுப்பனவிற்கான முதல் தொகைகள் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கான வருடாந்திர வரிக்கு உட்பட்ட வருமானம் 10,800 யூரோவுக்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 200 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 10,800 யூரோவை விட அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ, 17,400 யூரோவுக்கு குறைவாகவோ இருக்கும் குடும்பங்களுக்கு இது 100 யூரோவாக இருக்கும்.