ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வன்முறையை கைவிடுமாறும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) அரசே காரணம் எனக்கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கொழும்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியுள்ளது.
இதனையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தொிவித்துள்ளாா்.