முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய மீண்டும் நாட்டுக்கு வருவார் : பந்துல குணவர்தன தகவல்
செவ்வாய் கிழமையான (26) இன்று அமைச்சவரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது.
இதன் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் பந்துல குணவர்தன பதில் அளிக்கையில் " முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாகவில்லை அவர் சட்ட பூர்வமாக வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் நாட்டுக்கு வருகை தரும் திகதி விவரம் குறித்து தனக்கு தெரியாது என அவர்" குறிப்பிட்டுள்ளார்.
அதே வேலை புதிய அரசின் வருங்கால வரவு செலவு திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்னவைக்கப்படும் எனவும் சர்வ கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம் பெரும் எனவும் அவர் சுட்டி காட்டி உள்ளார்.