தரம் 11 மாணவர் மீது துப்பாக்கிச் சூடு
நோர்த் யோர்க்கில் தரம் 11 மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நோர்த் யோர்க் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே பாடசாலை செயற்பாடுகள் முடக்கப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறைகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற வாகனத் தரிப்பிட பகுதிகளில் சுமார் ஆறு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலையின் சீ.சீ.ரீ.வி கமரா காணொளிகளின் மூலமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.