முதியோர் இல்லத்தில் கையும் களவுமாக சிக்கிய தாத்தா!
அவுஸ்திரேலியாவில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபடியே போதைப்பொருள் விற்றதாக நம்பப்படும், முதியவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸாரின் வாகனச் சோதனை நடவடிக்கையின்போது, 62 வயதான அந்த முதியவரிடம் மெத்தெம்ஃபெட்டமின், கஞ்சா போன்றவை இருந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
சிட்னியின் டூரல் பகுதியில் இருந்த அவரது முதியோர் இல்லத்தைச் சோதனையிட்டதில் மேலும் அதிகமான போதைப்பொருள்களையும் தடி ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்தனர்.
இதேவேளை குறித்த முதியோர் இல்லத்தில் வசித்துவருவோர், சந்தேகத்துக்குரிய முதியவரின் நடத்தை குறித்தும் அவரைப் பார்க்கவரும் விருந்தினர்கள் குறித்தும் ஏற்கெனவே சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் போதைப்பொருள் விசாரணை ஜூன் மாதம் தொடங்கியது என போலீசார் தெரிவித்ததுடன், கைதான அந்த 62 வயது முதியவர் மீது, போதைப்பொருள் வைத்திருந்தது, அதை விற்பனை செய்தது, உரிமமின்றி ஆயுதம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.