லண்டன் ரயில் நிலையம் அருகே பெரும் தீ விபத்து!
லண்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்து குறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது,
'லண்டனின் எலிபேண்ட் & கேஸ்டல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்த வணிக வளாகங்கள், நான்கு கார்கள், டெலிபோன் பாக்ஸ் ஆகியவை எரிந்து சாம்பலாகின. தீயை அணைக்க 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்' என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் யாரும் லண்டன் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரவேண்டாம் என்றும், அப்பகுதியில் மேற்கொள்ளும் பயணத்தைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Jesus Christ, scenes from Elephant and Castle fire. #London pic.twitter.com/vrIzRSXUuM
— Darren (@Darren94775262) June 28, 2021
அத்துடன் தீ விபத்து எப்படி நடந்தது என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த தீ விபத்துக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.