நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை!

Police spokesman Shooting Thailand Death
By Shankar Oct 07, 2022 12:16 AM GMT
Report

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

குழந்தைகள் அலறின; அழுதன. ஆனால் தாக்குதல் நடத்திய நபரின், கொலை வெறி தீரவில்லை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் ஈவிரக்கமின்றி தாக்கினார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்து வந்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

இருப்பினும், இந்த பயங்கர சம்பவத்தில், 35 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. எஞ்சிய 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் ஆவார்கள்.

பொலிஸார்ர் வருவதற்குள், அந்த நபர், தாக்குதல் நடத்தி விட்டு வெள்ளை நிற 'பிக்-அப்' லாரியில் அங்கிருந்து தப்பி விட்டார்.

கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. சம்பவம் தொடர்பில் தகவல் அந்த நகரத்தில் காட்டுத்தீபோல பரவியது. பரிதவித்துக்கொண்டு பெற்றோர்களும், உள்ளூர் மக்களும் அங்கு கூடினர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

கொலையாளி தப்பிச்சென்ற வாகனத்தை பொலிஸார் தேடிய போது, அவரது வீட்டின் அருகே அது முற்றிலும் எரிந்து போய் இருந்ததைக் கண்டனர். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து விட்டார் எனவும் தெரிய வந்தது.

அவரது வீட்டுக்குள் சென்று பொலிஸார் பார்த்தபோது, அவர் ஏற்கனவே தனது மனைவியையும், மகளையும் கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி, 35 பேரை கொன்று குவித்ததுடன், தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

அவர், பன்யா காம்ரப் (வயது 34) என்பவர் ஆவார். அவர், நா வாங் பொலிஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்.

சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் சிக்கி, அதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

அவர் இந்த படுபாதகச்செயலை நடத்தியதின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.


மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US