நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை!

Police spokesman Shooting Thailand Death
By Shankar Oct 07, 2022 12:16 AM GMT
Shankar

Shankar

Report

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

குழந்தைகள் அலறின; அழுதன. ஆனால் தாக்குதல் நடத்திய நபரின், கொலை வெறி தீரவில்லை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் ஈவிரக்கமின்றி தாக்கினார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்து வந்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

இருப்பினும், இந்த பயங்கர சம்பவத்தில், 35 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. எஞ்சிய 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் ஆவார்கள்.

பொலிஸார்ர் வருவதற்குள், அந்த நபர், தாக்குதல் நடத்தி விட்டு வெள்ளை நிற 'பிக்-அப்' லாரியில் அங்கிருந்து தப்பி விட்டார்.

கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. சம்பவம் தொடர்பில் தகவல் அந்த நகரத்தில் காட்டுத்தீபோல பரவியது. பரிதவித்துக்கொண்டு பெற்றோர்களும், உள்ளூர் மக்களும் அங்கு கூடினர்.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

கொலையாளி தப்பிச்சென்ற வாகனத்தை பொலிஸார் தேடிய போது, அவரது வீட்டின் அருகே அது முற்றிலும் எரிந்து போய் இருந்ததைக் கண்டனர். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து விட்டார் எனவும் தெரிய வந்தது.

அவரது வீட்டுக்குள் சென்று பொலிஸார் பார்த்தபோது, அவர் ஏற்கனவே தனது மனைவியையும், மகளையும் கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி, 35 பேரை கொன்று குவித்ததுடன், தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

அவர், பன்யா காம்ரப் (வயது 34) என்பவர் ஆவார். அவர், நா வாங் பொலிஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்.

சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் சிக்கி, அதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை! | Gunfire At A Child Care Center 35 People Died

அவர் இந்த படுபாதகச்செயலை நடத்தியதின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.


மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US