அமெரிக்க பணய கைதியை விடுதலை செய்ய ஒப்புகொண்ட ஹமாஸ்
தங்கள் பிடியில் உள்ள அமெரிக்க பணய கைதியை இன்று விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பணய கைதி
இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள அமெரிக்க பணய கைதியை இன்று விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் வாழ் அமெரிக்கரான இடன் அலெக்சாண்டர் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
2023 அக்டோபர் 7ம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அலெக்சாண்டரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனைக்கு பணய கைதியாக கடத்தி சென்றனர். அவரை மீட்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தற்போது அமெரிக்கா, ஹமாஸ் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையில் அலெக்சாண்டரை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.